Nehodí sa? Žiadny problém! Tovar môžete vrátiť až do 30 dní
S darčekovým poukazom nešliapnete vedľa. Obdarovaný si za darčekový poukaz môže vybrať čokoľvek z našej ponuky.
Až 30 dní na vrátenie tovaru
நாட்டில் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிற சாதிப் பூசல்களுக்கும் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவ சமுதாயம் காணவேண்டுமென்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு கலைஞர். கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள இந்தப் புரட்சிப் புதினத்தை, மிகவும் தேவையான தருணத்தில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.
சமநீதி தழைத்திடும் சமுதாய மறுமலர்ச்சிக்கு இந்த நூலின் வாயிலாகவும் தனது தொண்டினை ஆற்றிடும் கலைஞர் அவர்கள், சமத்துவக் கொள்கையினைச் செயல் மூலம் நிறைவேற்றி வருபவராவார்.
அவரது நெஞ்சின் ஆழத்திலிருந்து எழுந்திடும் உணர்வுகளே இந்த நூல் முழுதும் எழுத்துக்களாக வடிவெடுத்திருக்கின்றன.
தமிழ்க்கனி பதிப்பகம், கலைஞர் அவர்களின் நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் மணிமகுடத்தில் புதிய ஒளி முத்துக்களைப் பதித்து வருகிறது.
என்றும் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து உங்கள் கரங்களில் இந்த நூலை வழங்குகிறோம்.