Nehodí sa? Žiadny problém! Tovar môžete vrátiť až do 30 dní
S darčekovým poukazom nešliapnete vedľa. Obdarovaný si za darčekový poukaz môže vybrať čokoľvek z našej ponuky.
Až 30 dní na vrátenie tovaru
இளைஞர் சமுதாயத்திற்கு இன உணர்வையும் தன் மானத்தையும் ஊட்டி, நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தும் பேருரைகளும் நூல் வடிவில் வெளிவர கழக இளைஞர் அணி எடுத்துக்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, 1984 பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை, தஞ்சை, பூண்டி ஆகிய இடங்களிலுள்ள கல்லூரிகளில் மாணவ மணிகளிடையே தலைவர் கலைஞர் ஆற்றிய பேருரைகள் முக்கனி'எனும் தலைப்பில் இந்நூல் வடிவில் வெளியிடப் படுகிறது.
மன்னர் கல்லூரி பேரவையின் முத்தமிழ் விழாவின் நிறைவுநாளை இடையிலே சில நாட்கள் ஒத்தி போட வேண்டிய சூழ்நிலை எனக்கும் உங்களுக்கும் ஏற்பட்டு எவ்வளவு நாளானாலும் கவலையில்லை நான் வந்தே தீர வேண்டும் என்று நீங்கள் காட்டிய பேரார்வத்தின் காரண மாக இன்று மாலை இந்த கல்லூரிப் பேரவையின் முத் தமிழ் விழா நிறைவுநாளைக் கொண்டாடுகிற இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
இங்கே என்னை அறிமுகம் செய்து உரையாற்றிய பேராசிரியர் கருப்பையா, தன்னை, எனது மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். என்னை அறிமுகப்படுத் தச் சொன்னால் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் தன்னை எனது மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதன் காரணமாக அவர் சற்று உரிமையோடு நான் எழுதிய நூல்களில்-கட்டுரைகளில் உள்ள அச்சுப் பிழைகளை எடுத்துக் காட்டுகின்ற வாய்ப்பினை பெற்று எனக்குக் கடிதம் எழுதியதாகச் சொன்னாரே, அதைப்போல நானும் முதலில் அவர் இங்கே குறிப்பிட்ட பிழை ஒன்றை திருத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
Ahoj! Som Libroamiko, tvoj knižný radca.
Ako ti môžem pomôcť?